22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்கு அல்லு அர்ஜுனும் ஒரு காரணம் என ஆந்திர காவல் துறை நேற்று அவரைக் கைது செய்தது. ரிமாண்ட் செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் இன்று காலை வெளியில் வந்தார் அல்லு அர்ஜுன்.
வீட்டுக்கு வந்த அவரை அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். அவருடைய தம்பி அல்லு சிரிஷ், மனைவி சினேகா, மகன், மகள் ஆகியோர் வாசலுக்கே வந்து அவரை கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்றனர். மேலும் உறவினர்கள் பலரும் அவரை அன்புடன் ஆறுதல் தெரிவித்தனர்.
வீட்டுப் பணியாளர் பெரிய பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டார். பின் நிருபர்களை சந்தித்த அல்லு அர்ஜுன், தான் சட்டத்தை மதிப்பதாகவும், பெண் இறந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார்.