விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) பான் இந்தியா படமாக வெளியானது.
இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடந்தது. அந்தக் காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனும் படம் பார்த்தார். தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கலைந்த ஓடிய கும்பலில் ஒருவர் மீது மற்றவர் விழுந்து தவித்தனர். அதில் 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். கணவர், தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் படம் பார்க்க வந்திருந்தார்.
இதனிடையே, அந்தப் பெண் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில், “நேற்று இரவு திரையிடலின் போது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்தக் குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.