'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‛அமரன்'. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் தோல்வியடைந்ததால் இந்த அமரன் படம் தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையில் உருவான இந்த அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதற்கு காரணமே இயக்குனர் விஷ்ணுவர்தன்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அஜித் நடித்த ‛பில்லா, ஆரம்பம்' உள்பட பல படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். தற்போது ‛நேசிப்பாயா' படத்தை இயக்கியுள்ளார். இவர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் ‛ஷெர்ஷா' என்ற ஒரு படத்தை இயக்கினார். இந்த படம் மறைந்த ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையில் உருவாகி இருந்தது. கடந்த 2021ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தின் வெற்றியை பார்த்து தான் தனக்கு முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு கதையை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததாக விஷ்ணு வர்தனிடத்தில் கூறியுள்ளார் கமல்ஹாசன்.
இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ள இயக்குனர் விஷ்ணுவர்தன், நான் இயக்கிய ஷெர்ஷா படம் தான் அமரன் படம் உருவாக காரணம் என்று கமல்ஹாசன் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.




