விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாக முதலில் அறிவித்தனர். அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படமாக உருவாகியுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் யு-டியூப்பில் அளித்த நேர்காணல் ஒன்றில் முதல் முறையாக இது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதன்படி, "அஜித்திற்கு 'நானும் ரவுடி தான்' படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த சமயத்தில் அவரை நான் சந்தித்தபோது, நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால், நானும் ரவுடிதான் படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள். நாம் படம் பண்ணுவோம் என்றார். அதன் பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார்.
இது ஒரு பகுதி என்றால், மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு முற்றிலுமாக வேறு மாதிரி சிந்தனைகள் இருந்தது. ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் போது இதெல்லாம் இருக்க வேண்டும் என விதிகளை வைத்திருந்தனர். எனக்கு அது எதுவும் புரியவில்லை. நான் கதை எழுதும்போதே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை மாற்றியமைத்து தான் எழுதுவேன். என்னுடைய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட மலையாளத்தில் வெளிவந்த 'ஆவேஷம்' படத்தை போன்றது.
நானும் பல மாஸ் தருணங்களை வைத்து தான் அந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதினேன். அதை நான் தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது, அவர்கள், என்ன ரொம்ப காமெடியா இருக்கு என சொன்னார்கள். எமோஷனலோ, கருத்தோ இல்லை என்றார்கள். இது தான் அந்த படத்தில் இருந்து நான் வெளியேறியதற்கான காரணம்" என தெரிவித்துள்ளார்.