ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. 4 வாரங்களை கடந்து 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கை அமரன் படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் டில்லியில் அமைச்சரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து மிகச் சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியதற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.