மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” |
தெலுங்கு திரையுலகில் ஓரளவு பிரபலமான பாடலாசிரியர்களில் ஒருவரான குலசேகர் என்பவர் உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கடந்த 2006ல் பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாடலாசிரியராக மாறினார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் ஆர்.பி பட்நாயக் (ஜெயம் பட இசையமைப்பாளர்) இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல் எழுதியுள்ள இவர் பாடல்களால் மட்டுமல்ல பரபரப்பான விஷயங்களாலும் இன்னும் பிரபலமானார்.
2018ல் காக்கிநாடாவில் உள்ள ஒரு தேவி கோவிலில் குலசேகர் திருடும்போது போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைல் போன்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் என கைப்பற்றப்பட்டன. இவரது இந்த குற்றச்செயலைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரிடமிருந்து விலகி விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.