ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தற்போது அஜித் குமார் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தான் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ''விஜய்யை பொருத்தவரை படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போன்றுதான் அஜித்குமாரும் படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து பேசியதில்லை. யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட தான் அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.