மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தற்போது அஜித் குமார் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் அஜித்தும் அரசியலுக்கு வருவாரா என்பது போன்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அது குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா தான் அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ''விஜய்யை பொருத்தவரை படப்பிடிப்பு தளங்களில் அமைதியாகவே இருப்பார். இதுவரை அவர் அரசியல் பேசி நான் பார்த்ததே இல்லை. ஆனாலும் இன்றைக்கு விஜய் அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இப்படி விஜய்யை போன்றுதான் அஜித்குமாரும் படப்பிடிப்பு தளங்களில் அரசியல் குறித்து பேசியதில்லை. யாராவது அரசியல் குறித்து பேச தொடங்கினால் கூட தான் அமைதியாகி விடுவார். அதோடு அவருக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் துளி கூட கிடையாது. அதனால் விஜய்யை போன்று அஜித்தும் அரசியலுக்கு வருவார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை,'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்திருக்கிறார்.