ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள வில்லன் நடிகர் ஆன விநாயகன். ஆனால் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு டப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இதற்கு முன் இருந்ததை விட பல மடங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேசமயம் படங்களில் நடித்து பிரபலமாவது ஒரு பக்கம் என்றால் தேவையில்லாத பேட்டிகள், பொது இடங்களில் சண்டை, வாக்குவாதம் என இவற்றின் மூலம் தான் விநாயகன் அடிக்கடி பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார்.
அந்த வகையில் தற்போது கோவாவில் தங்கி இருக்கும் விநாயகன் அங்கு உள்ள தெருவோர கடைக்காரர் ஒருவரிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் கோவாவில் உள்ள ஒரு சாதாரண தெருவில் இருக்கும் ஒரு சின்ன கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விநாயகன். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் கூட விநாயகன் தனது குடும்ப விஷயம் காரணமாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்பதால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.