மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு |
சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் 23வது பட வேலைகளில் மீண்டும் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, துப்பாக்கி படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒரு காட்சியை சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் நடத்தி இருக்கிறார் முருகதாஸ். அப்போது பெருங்களத்தூரில் உள்ள உயரமான பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.