ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள அமரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் 23வது பட வேலைகளில் மீண்டும் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க, துப்பாக்கி படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் ஒரு காட்சியை சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரில் நடத்தி இருக்கிறார் முருகதாஸ். அப்போது பெருங்களத்தூரில் உள்ள உயரமான பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.