300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா இடையிலான மோதல் விவகாரம் நேற்று முதல் பரபரப்பாக உள்ளது. இது குறித்து யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. நயன்தாராவின் டாகுமென்டரியும் ஒரு வியாபாரம், தனுஷ் கேட்ட அல்லது கொடுக்க மறுத்த காரணமும் ஒரு வியாபாரம் என்பதுதான் அனைவரும் புரிந்து கொண்டது.
இருந்தாலும், நயன்தாராவின் அறிக்கை நேற்று வெளிவந்தது முதல் எக்ஸ் தளத்தில் கடுமையான, அசிங்கமான சண்டை அரங்கேறி நடந்து வருகிறது. நயன்தாராவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் களமாட ரசிகர்கள் மிகவும் குறைவு. அதே சமயம் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் களமாட, ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் மிக அதிகம்.
எக்ஸ் தளத்தில் நேற்று 'CharacterlessLadyNayanthara' என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்தனர். அதில் சில வரம்பு மீறி ஆபாசமான வார்த்தைகளுடன், அசிங்கமான கெட்ட வார்த்தைகளுடன் கூடிய சண்டையாகவும் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதில் அறிக்கையும் வரவில்லை. அதே சமயம் தனுஷ் ரசிகர்களின் எதிர்ச் செயல் அவர்களாக செய்ததா அல்லது செய்யச் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.