உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா இடையிலான மோதல் விவகாரம் நேற்று முதல் பரபரப்பாக உள்ளது. இது குறித்து யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. நயன்தாராவின் டாகுமென்டரியும் ஒரு வியாபாரம், தனுஷ் கேட்ட அல்லது கொடுக்க மறுத்த காரணமும் ஒரு வியாபாரம் என்பதுதான் அனைவரும் புரிந்து கொண்டது.
இருந்தாலும், நயன்தாராவின் அறிக்கை நேற்று வெளிவந்தது முதல் எக்ஸ் தளத்தில் கடுமையான, அசிங்கமான சண்டை அரங்கேறி நடந்து வருகிறது. நயன்தாராவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் களமாட ரசிகர்கள் மிகவும் குறைவு. அதே சமயம் தனுஷுக்கு சமூக வலைதளங்களில் களமாட, ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் மிக அதிகம்.
எக்ஸ் தளத்தில் நேற்று 'CharacterlessLadyNayanthara' என்ற ஹேஷ்டேக்குடன் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்தனர். அதில் சில வரம்பு மீறி ஆபாசமான வார்த்தைகளுடன், அசிங்கமான கெட்ட வார்த்தைகளுடன் கூடிய சண்டையாகவும் இருந்தது.
இந்த விவகாரம் குறித்து தனுஷ் தரப்பிலிருந்து எந்தவிதமான பதில் அறிக்கையும் வரவில்லை. அதே சமயம் தனுஷ் ரசிகர்களின் எதிர்ச் செயல் அவர்களாக செய்ததா அல்லது செய்யச் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.