'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2007ம் ஆண்டு வெளியான 'முருகா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். வானம் பார்த்த சீமையிலே, உலா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை.
சினிமா வாய்ப்புகளும், வெற்றிகளும் சரியாக அமையாத இளம் நடிகர்கள் சின்னத்திரைக்கு வருவது புதிதில்லை. அந்த வரிசையில் தற்போது அசோக்கும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, 'மவுனம் பேசியதே' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
அவரவர் விருப்பத்துடன் ஒரு ஜோடிக்கும், பரஸ்பர விருப்பமில்லாமல் ஒரு ஜோடிக்கும் என இரு ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவர்கள் ஒரே பேருந்தில் பயணிக்க, பேருந்து விபத்தில் சிக்குகிறது. அதில் இரு ஜோடிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியங்கள்தான் தொடரின் கதை.
அசோக் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு 'ஸ்ரீகிருஷ்ணா' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.