ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்ளில் ஒருவர் அல்லு அர்ஜுன். கடந்த மே மாதம் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது அவர் நந்தியால் தொகுதியில் அவருடைய நண்பர் சில்ப ரவி சந்திர கிஷோர் தெட்டி என்பவருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நந்தியால் ஊரில் உள்ள சில்ப ரவி இல்லத்தில் பெரும் கூட்டமாக மக்கள் திரண்டனர்.
அதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இருந்த சூழ்நிலையிலும் போலீஸார் அல்லு அர்ஜுனுக்கு பாதுகாப்பு வழங்கினர். அவர் சென்ற பிறகு சிலர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அல்லு அர்ஜுன் மீதும், சில்ப ரவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அல்லு அர்ஜுன், சில்ப ரவி ஆகியோர் முறையிட்டனர். கடந்த மாதம் இது குறித்து விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இன்று அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
நந்தியால் தொகுதியில் சில்ப ரவி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அவருக்காக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் தான் அல்லு அர்ஜுன்.




