காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
சின்னத்திரை நடிகையான ஜெனிப்ரியா வாணி ராணி சீரியலின் மூலம் அறிமுகமாகி, சில தொடர்களிலும் படங்களிலும் நடித்துள்ளார்.
சொந்தமாக ப்யூட்டி பார்லர் வைத்திருக்கும் ஜெனி ப்ரியாவுக்கு சில வாரங்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இப்போதே 100 சவரன் நகை வேண்டுமென கேட்க, ஜெனிப்ரியா முதலில் 50 சவரன் நகையை மட்டும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஜெனிப்ரியாவை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற மாப்பிள்ளை வீட்டாரின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இந்த திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு ஜெனிப்ரியா வந்துள்ளார்.
அப்போது அவர் கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பி கொடுத்த மாப்பிள்ளை வீட்டார் 50 சவரன் நகை பற்றி கேட்டால் அப்படி எதுவுமே தங்களிடம் கொடுக்கவில்லை என்று குண்டை தூக்கி போட்டுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியான ஜெனிப்ரியா தற்போது துநேசன் மற்றும் குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.