நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா | பிளாஷ்பேக் : விமர்சனம் மீது தொடரப்பட்ட முதல் வழக்கு | பிளாஷ்பேக்: ஒரே தீபாவளியில் வெற்றி, தோல்வியை சந்தித்த சிவகுமார் | தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது | நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார் | 'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம் | தெலுங்கில் வரவேற்பைப் பெறும் சிறிய படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்' | பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” | எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா |
சினிமாவைப்பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். பாண்டியராஜ் இயக்கத்தில் விமலுடன் இணைந்து அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் என்ற இரண்டு படங்களும் மெகா ஹிட் ஒன்றும் இல்லை. சுமாராக ஓடிய படங்கள்தான். ஆனால் அந்த சுமாரான வெற்றியை முன்வைத்தே சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து விட்டார்கள். அதன்காரணமாக இதுதான் சரியான தருணம் என்று அவரும் காலரை தூக்கி விட்டுள்ளார்.
குறிப்பாக, தன்னை முற்றுகையிட்ட சில தரமான டைரக்டர்களைகூட கண்டுகொள்ளாத அவர், முன்னணி கம்பெனி மூலமாக தன்னை தொடர்பு கொள்ளும டைரக்டர்களிடம் மட்டுமே காது கொடுத்து கதை கேட்கிறார். அதிலும் மேல்தட்டு நடிகர்களைப்போன்று எனது ரசிகர்களுக்கு இதெல்லாம் பிடிக்காது. அதனால் அந்த காட்சிகளை இந்த மாதிரி மாற்றுங்கள். அதேபோல், இந்தந்த டெக்னீசியன்கள்தான் எனக்கு செட்டாகும் என்றும் சொல்லி ஒரு பட்டியலை தூக்கிப்போடுகிறாராம்.
இப்படி சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகளும் மாறி இருப்பதால், அவரை மாதக்கணக்கில் தொடர்பு கொண்டு கால்சீட் கேட்டு வந்த கம்பெனிகளெல்லாம் இப்போது பின்வாங்கி விட்டன. இந்த நிலையில், ஸ்டுடியோ கிரீன், திருப்பதி பிரதர்ஸ் உள்ளிட்ட சில கம்பெனிகளின் படங்களில் மட்டுமே அடுத்தடுத்து நடிக்கயிருக்கிறார் சிவார்த்திகேயன். முன்னதாக, அவர் நடித்து வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.