‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்கும் ஆசை கொண்ட ஐஸ்வர்யா, 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பட்டத்துயானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே வேறு வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு மகளின் நடிப்பு ஆசையை நிறைவேற்ற 'சொல்லிவிடவா' என்ற படத்தை அர்ஜூன் இயக்கினார். இந்த படம் 'பிரேம பரஹா' என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிவந்தது.
அதன்பிறகும் ஐஸ்வர்யாவுக்கு படங்கள் அமையவில்லை. இதற்கிடையில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது திருமணத்திற்கு பிறகும் மீண்டும் நடிக்க வருகிறார். அவரது தந்தை அர்ஜூனே மகளை மீண்டும் இயக்குகிறார். ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு படத்தை இயக்க இருந்தார். அதில் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க ஒப்பந்தமானார். அர்ஜுனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விஷ்வக் சென் விலகினார்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 'சீதா பயணம்' என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா அர்ஜூன் சீதாவாக நடிக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் நாயகனாக நடிக்கிறார். இதை அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு ரீ என்ட்ரியை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.