கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
திராவிட இயக்க படைப்பாளர்களில் முக்கியமானவர் பாரதிதாசன். திரைப்படங்களில் உணர்ச்சியூட்டும் பல பாடல்களை எழுதி உள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். அவர் முதன் முதலாக பாடல் எழுதியது 'ஸ்ரீராமானுஜர்' என்ற பக்தி படத்திற்கு. ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே அவர் பாடல்கள் எழுதிய 'பாலாமணி அல்லது பக்கா திருடன்' என்ற படம் வெளிவந்து அதுவே முதல் படமானது.
'பக்கா திருடன்' ஒரு துப்பறியும் படம். ஒரு பணக்கார வீட்டு பெண்ணுக்கு திருமணம் நடக்கும்போது அவளையும், அவள் வருங்கால கணவனையும் யாரோ கடத்தி சென்று ஒரு குகைக்குள் அடைத்து வைக்கிறார்கள். வருங்கால கணவன் அந்த பெண்ணை விட்டு விட்டு தப்பி ஓடுகிறான். அந்த பெண்ணும் தப்பி வரும்போது இறந்து கிடந்த ஒரு குழந்தையை எடுத்து அதை முறைப்படி புதைக்க முயற்சிக்கும்போது குழந்தையை கொன்றதாக அவள் கைது செய்யப்படுகிறாள். படத்தின் நாயகனான துப்பறியும் நிபுணர் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை.
'பாலாமணி' படத்தை பி.வி.ராவ் என்பவர் இயக்கி இருந்தார், டி.எஸ்.ஜெயா பாலாமணியாகவும், எஸ்.வி.சகஸ்ரநாமம் துப்பறிவாளராகவும் நடித்திருந்தார்கள், ஸ்ரீராமானுஜர், பாலாமணி இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.