பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் | அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ் | வேட்டையன் படத்தில் நானி நடிக்க மறுத்தாரா? | இயக்குனராக அறிமுகமாகும் வேட்டையன் வில்லன் நடிகர் ; கதாநாயகியாக பிசாசு நடிகை | விக்ரம் பட நடிகைக்கு போதை கும்பல் மிரட்டல் | மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மலையாள நடிகர் கைது |
மலையாள சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகர் பைஜு சந்தோஷ். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர் திருவனந்தபுரம் வெள்ளயம்பலம் பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றார். இதனால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு சிக்னலில் இடித்தபடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுபோதையில் இருந்த நடிகர் பைஜூ சந்தோஷை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்ததால் அவரை பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ரத்த பரிசோதனைக்கு மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து பைஜூ சந்தோஷை கைது செய்தனர். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சொந்த ஜாமீனில் அவரை போலீசார் விடுவித்தனர்.