'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
இயக்குனர் சிவாவின் தம்பியான நடிகர் பாலா, அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்தே உட்பட பல படங்களை நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் கடந்த 2010ல் பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்கள்.
அதன் பிறகு எலிசபெத் உதயன் என்பவரை 2021ம் ஆண்டு திருமணம் செய்த நடிகர் பாலா, அவரையும் 2024ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்படியான நிலையில் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா தற்போது இசையமைப்பாளர் கோபி சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், தனது முன்னாள் கணவரான நடிகர் பாலா, தன்னையும் தனது மகளையும் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இன்று காலை கேரளா போலீசார் நடிகர் பாலாவை கைது செய்துள்ளார்கள். அவர் மட்டுமின்றி பாலாவின் மேனேஜர் ராஜேஷ், நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.