அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
பட்டுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தவர் பாட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சின்ன சின்ன படங்களில் பாடல்கள் எழுதி மெதுவாக வளர்ந்து கொண்டிருந்த கல்யாண சுந்தரத்தை பற்றி கேள்விப்பட்ட எம்ஜிஆர் அவரை நேரில் அழைத்து பாராட்டி தனக்கு ஒரு பாடல் எழுதி தருமாறு கேட்டு அதற்கான சூழலை சொன்னார். உடனே கல்யாண சுந்தரம் தானே மேஜையில் தாளம் போட்டு மெட்டமைத்து பாடிய பாடல் தான் “சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாம ஏர் நடத்தி..” என்ற பாடல்.
எந்த குறிப்பும், முன் தயாரிப்பும் இன்றி கல்யாண சுந்தரம் பாடியதை கேட்டு அசந்து போன எம்.ஜி.ஆர் அடுத்த நிமிடமே இன்னொரு சூழலை சொல்லி அதற்கொரு பாடல் கேட்டார். அந்த பாடல்தான் “திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே” இரண்டு பாடலுக்கும் எம்ஜிஆர் கொடுத்த சன்மானம் கல்யாண சுந்தரத்தின் ஒரு வருட வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது.
கல்யாண சுந்தரத்தின் பாடல்கள்தான் எம்ஜிஆரின் புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பார்கள். இதை எம்ஜிஆரே ஒப்புக் கொண்டுள்ளார். முதல்வராக இருந்த எம்ஜிஆர் ஒருமுறை வானொலி நேர்காணலின்போது “என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்கு தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்” “என்று மனம் திறந்து பாராட்டினார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் 65வது நினைவு நாள் இன்று.