7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தின் போது காதல் ஏற்பட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட அவர்களது காதல், 2022ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சென்னை அருகே உள்ள மகாபாலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்த திருமண நிகழ்வை அப்போதே ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் விற்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. திருமண வீடியோவைக் கூட விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்களே என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த திருமண வீடியோ வெளியீடு குறித்து அதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது விரைவில் வெளியாக உள்ளதாக அவர்களது தளத்தில் அறிவித்துள்ளார்.
'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக அது விரைவில் இடம் பெற உள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் 'வாடகைத் தாய்' மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பெற்றோர் ஆனார்கள். அதுவும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகள் பற்றியும் அப்டேட் செய்து டாகுமென்டரி படம் இருக்குமா அல்லது திருமண நிகழ்வுகள் மட்டும் இருக்குமா என்பது வெளிவந்த பின்புதான் தெரியும்.