கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு சீசன்களாகத் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து இந்த எட்டாவது சீசனைத் தொகுத்து வழங்கவில்லை என விலகினார். அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க நேற்று 'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சி ஆரம்பமானது.
கமல்ஹாசனைப் போல விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா, நிகழ்ச்சியின் போட்டியாளர்களை எப்படி எதிர்கொள்வார், சமாளிப்பார் என்ற கேள்வி நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பு எழுந்தது. ஆனால், நேற்று நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஒளிபரப்பான பின் பல ரசிகர்கள் விஜய் சேதுபதிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
போட்டியாளர்களுடனான அறிமுகத்திலேயே விஜய் சேதுபதியின் உரையாடல் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதில் ஒரு தற்பெருமை இருக்கும், ஆனால், விஜய் சேதுபதியின் பேச்சில் அது இல்லை என்பது சிறப்பானது எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் சில கமல் ரசிகர்கள் கமல்ஹாசனை விட்டுக் கொடுக்காமல் அவருடைய தொகுப்பே தனி என புகழ் பாடி வருகிறார்கள்.
ஒரு நாள்தான் கடந்துள்ளது, இன்னும் 100 நாட்களுக்கு மேல் போக வேண்டும். வரும் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடிவிட்டல், அவர் கமல்ஹாசனின் இடத்தை நிரப்புகிறாரோ இல்லையோ தனி பாணியை உருவாக்க வாய்ப்புள்ளது.




