பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

ஒரே படத்தில் பல இசை அமைப்பாளர்கள் பணியாற்றுவது அபூர்வமாக நடக்கிற ஒரு விஷயம். அப்படி ஒரு படம் 'கண்ணில் தெரியும் கதைகள்'. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா, வடிவுக்கரசி எம்.என்.ராஜம், விஜயகுமார், விஜயசந்திரிகா உள்பட பலர் நடித்திருந்தனர். தேவராஜ் மற்றும் மோகன் இயக்கி இருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் தயாரித்திருந்தார்.
கொடூரமான ஒரு பண்ணையாருக்கும் ஒரு ஏழை சிறுவனுக்குமான மோதல்தான் கதை. பண்ணையாரால் துரத்தப்படும் சிறுவன் நகரத்திற்கு வந்து படித்து ஆளாகி மீண்டும் கிராமத்திற்கு சென்று பண்ணையாரை பழிவாங்கும் கதை.
இந்த படத்திற்கு இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர். நடிகர் ஏ.எல்.ராகவன் அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர், அவர் தயாரிக்கும் படம் என்பதாலும், தேவராஜ் - மோகன் அனைவருக்கும் பிடித்த இயக்குனர்கள் என்பதாலும் 5 இசை அமைப்பாளர்களும் ஆளுக்கொரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்தனர்.
எல்லா பாடல்களுமே ஹிட்டானது. குறிப்பாக இளையராஜா இசையமைத்த “நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் இளமை இது புதுமை...” என்ற பாடல் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது.