அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்! | சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார் | அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்' | 'கங்குவா' 2000 கோடி வசூலிக்குமா?! - அதிர்ச்சியடையும் ரசிகர்கள்… | ஓமஹாவில் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள் | 2024ம் ஆண்டின் 7வது 100 கோடி படம் 'வேட்டையன்' | உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு” | உலக சாதனை படைத்த குக் வித் கோமாளி புகழின் மகள் | சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்த கேப்ரில்லா | அன்று 'அஞ்சான்' படத்தை கிண்டலடித்தவர் : இன்று சூர்யாவின் இயக்குனர் |
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள 'மெய்யழகன்' படம் கடந்த 27ம் தேதி வெளியானது. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த்சாமி நடித்துள்ள இப்படத்தை '96' புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்டு அரவிந்த்சாமி பேசியதாவது: ''நான் பணியாற்றிய படங்களிலேயே மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று. அதற்கு படக் குழுவினருக்கு நன்றி. இந்த படம் வெளியாகும்போது நான் இங்கே இல்லை. வெளிநாட்டுக்கு செல்ல வேண்டி இருந்தது. வெளிநாட்டில் இருந்தாலும் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார், ராஜசேகர் ஆகியோருடன் தொலைபேசியில் அவ்வப்போது படம் குறித்து பேசிக் கொள்வேன்.
படத்தில் எனது நடிப்பை பாராட்டியதை விட கார்த்திக்கின் நடிப்பை பாராட்டியதுதான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை சிறிதும் மாற்றாமல் அந்தக் கதாபாத்திரங்களை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்க செல்வதற்கு முன் இந்த கதாபாத்திரம் இப்படித்தான் என மனதில் நினைத்துக் கொண்டு செல்வேன். ஆனால் அங்கே உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பை பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு நடிப்பேன்.
நான் மற்றவர்களுடன் போட்டியாக நடிக்க வேண்டும் என நடிப்பதில்லை. நான் அதிக படங்களில் நடிப்பதும் இல்லை. நான் எந்த போட்டியிலும் இல்லை. செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஒரு அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்''. இவ்வாறு அவர் பேசினார்.