ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சினிமாவின் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் 60 சதவீதம் புராண படங்களே வெளிவந்தது. குறிப்பாக ராமாயணம், மஹாபாரதம் கதைகளும், அவற்றின் கிளை கதைகளும் சினிமாவாக மாறிக் கொண்டிருந்தது. அவை அனைத்தும் பக்தி ரசம் சொட்டும் படங்களாக மிகவும் சீரியசான படங்களாக இருந்தது. ஆனால் முதன் முதலாக புராண கதையை காமெடியாக சொன்ன படம் 'கருட கர்வபங்கம்'.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையே கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் காமெடி கலந்ததுதான். எந்த சீரியசான விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப கையாள்வதுதான் கிருஷ்ணரின் ஸ்டைல். இதை மையமாக கொண்டு உருவான படம் இது.
கிருஷ்ணருக்கு பாமா, ருக்மணி என இரு மனைவிகள் அவரது சகோதார் பல ராமர், அவரது வாகனம் கருடன். பலராமன் பாண்டவர்களுக்கு எதிராக துரியோதனுடன் நின்றார். பாரத போரில் துரியோதனன் தோற்ற பிறகு, தோல்விக்கு காரணம் கிருஷ்ணன்தான் என்று அவரை பழிவாங்க வருகிறார் பலராமர். கிருஷ்ணரின் மனைவிகளுக்குள் சண்டை மூட்டி குழப்பத்தை விளைவிக்கிறார்.
இன்னொரு பக்கம் கிருஷ்ணரின் வாகனமாக கருடனுக்கு பலராமரை பிடிக்காது. தன் பெயரில் உள்ள ராமரை நீக்க வேண்டும் என்று சொல்கிறவர். கிருஷ்ணருக்கு எதிராக பலராமர் போடும் திட்டங்களை கருடன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதனை காமெடியாக சொன்ன படம்.
'இது புராண காமெடி தமிழ் பேசும் படம்' என்றே படத்தை விளம்பரம் செய்தார்கள். இந்த படத்தை ஆர்.பத்மநாபன் இயக்கினார். அவரது பேனரான ஓரியண்டல் பிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கோல்கட்டாவில் உள்ள பயனீர் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. புகழ்பெற்ற பாடகர் செருகளத்தூர் சாமா கிருஷ்ணராகவும், வித்வான் சீனிவாசன் நாரதராகவும் நடித்தார். இசையமைப்பாளர் எம்.டி.பார்த்தசாரதி அனுமானாகவும் நடித்தனர் சத்யபாமாவாக எம்.எஸ். மோகனாம்பாள் நடித்தார்.