7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஓடிடி தளங்களில் வெளியாகி அங்கும் பல கோடி மணி நேரப் பார்வைகளைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை விற்பனை எதிர்பார்த்தபடி நடைபெறாமல் தடுமாறியது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களில் சாட்டிலைட் டிவியில் படங்களைப் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டதாம். அதனால், டிவி நிறுவனங்கள் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயங்கி வருகிறார்களாம். அதன் காரணமாக 'கல்கி 2898 ஏடி' படத்திற்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போயுள்ளது.
முதலில் ஸ்டார் மா டிவியிலும், பின்னர் ஜீ டிவியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் படத்தயாரிப்பாளர்கள். அங்கு வியாபாரம் முடிவடையாத நிலையில் தற்போது ஜெமினி டிவியில் படத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
இனி வரும் காலங்களில் பெரிய படங்களின் சாட்டிலைட் டிவி உரிமை என்பது இறங்குமுகமாகவே இருக்கும் என்பதே உண்மை. அதற்குப் பதிலாக ஓடிடி உரிமை மட்டுமே நல்ல விலைக்கு விற்கப்படலாம்.