இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'தேவரா 1' படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என தயாரிப்பி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு நேற்று கிடைத்தது. இந்நிலையில் 172 கோடி வசூல் என்பது அதிகமில்லையா என தெலுங்கு ரசிகர்களே கமெண்ட் பகுதியில் கேட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் வசூலாக 191 கோடி வசூலித்தது என்று அறிவித்திருந்தார்கள். 'தேவரா 1' படத்தை விடவும் அப்படம் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஹிந்தியில் அப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விடவும் சுமார் 19 கோடி மட்டுமே குறைவான வசூல் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தான் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருவதாகத் தெரிகிறது.
வசூல் வேட்டை என்பதை விட வசூல் விளையாட்டு என்பதுதான் இந்தக் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக அறிவிக்கப்படுகிறது.