ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'தேவரா 1' படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என தயாரிப்பி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு நேற்று கிடைத்தது. இந்நிலையில் 172 கோடி வசூல் என்பது அதிகமில்லையா என தெலுங்கு ரசிகர்களே கமெண்ட் பகுதியில் கேட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் வசூலாக 191 கோடி வசூலித்தது என்று அறிவித்திருந்தார்கள். 'தேவரா 1' படத்தை விடவும் அப்படம் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஹிந்தியில் அப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விடவும் சுமார் 19 கோடி மட்டுமே குறைவான வசூல் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தான் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருவதாகத் தெரிகிறது.
வசூல் வேட்டை என்பதை விட வசூல் விளையாட்டு என்பதுதான் இந்தக் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக அறிவிக்கப்படுகிறது.




