'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் |

ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படமான 'தேவரா 1' படத்தின் முதல் நாள் வசூல் 172 கோடி என தயாரிப்பி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் மட்டுமே இப்படத்திற்கு அதிக வரவேற்பு நேற்று கிடைத்தது. இந்நிலையில் 172 கோடி வசூல் என்பது அதிகமில்லையா என தெலுங்கு ரசிகர்களே கமெண்ட் பகுதியில் கேட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டில் வெளிவந்த பிரம்மாண்ட சயின்ஸ் பிக்ஷன் தெலுங்குப் படமான 'கல்கி 2898 ஏடி' படம் முதல் நாள் வசூலாக 191 கோடி வசூலித்தது என்று அறிவித்திருந்தார்கள். 'தேவரா 1' படத்தை விடவும் அப்படம் அதிக தியேட்டர்களில் வெளியானது. ஹிந்தியில் அப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அப்படத்தை விடவும் சுமார் 19 கோடி மட்டுமே குறைவான வசூல் என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் தான் அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வருவதாகத் தெரிகிறது.
வசூல் வேட்டை என்பதை விட வசூல் விளையாட்டு என்பதுதான் இந்தக் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக அறிவிக்கப்படுகிறது.