சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
சினிமாவில் பல கனவுகளுடன் வருபவர்கள் அதிகம். சிலருக்கு அந்த கனவுகள் உடனே நிறைவேறிவிடும், சிலருக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், சிலருக்கு நடந்தும் நிலைக்காமல் போய்விடும்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவிலிருந்து வந்த சுவாசிகா. அப்போது சில படங்களில் நடித்தார், ஆனாலும் அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தற்போது 31 வயதில் அவர் நடித்த 'லப்பர் பந்து' படம் அவருக்குத் திருப்புமுனையாக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள படமாக அமைந்துள்ளது.
அது பற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை கண்ணீருடன் பேசி நேற்றைய நன்றி அறிவிப்பு சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். “பல கனவுகளுடன் வந்தேன், எதுவும் நடக்கவில்லை. பெட்டி, படுக்கையுடன் மன வருத்தத்துடன் அம்மாவுடன் திரும்ப கேரளாவுக்கே சென்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்நாட்ல வந்து ஒரு நல்ல படத்துல எனக்கு 'கம் பேக்' கிடைச்சது மகிழ்ச்சி. இங்க சென்னைல வீடு கட்டணும்னு ஆசைப்பட்டேன். இனிமே இங்க செட்டிலாகணும்னு கனவு மீண்டும் வருது. இந்தப் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் நான் நன்றாக நடிக்கிறேன் என ஒரு வார்த்தை கூட பாராட்டவேயில்லை, இப்பவாவது சொல்லுங்க, நீங்க சொல்வீங்கன்னு இன்னும் காத்திட்டிருக்கேன்” என்றும் வருத்தப்பட்டார்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, “நீங்க நல்லாதான் நடிச்சீங்க சுவாசிகா. சொல்லக் கூடாதுன்னு இல்ல, நான் சொல்றத விடவும் இவங்க சொல்லணும். செட்டிலயே, என் மனைவி கூட 'என் தலைவி'தான்டா இந்தப் படம்னு சொன்னாங்க. தமிழ்ல ரீஎன்ட்ரி வேணும்னு கேட்டாங்க. கதை சொல்லி முடிச்சதும் ஓகே சொல்லிட்டாங்க. எந்த மொழில பண்ணாலும், எனக்கு தமிழ்ல ரீ-என்ட்ரி வேணும். தமிழ்ல பிரேக் கிடைக்கணும்னு கேட்டாங்க, அவங்க ஹேப்பினா, நானும் ஹேப்பிதான்,” எனப் பாராட்டினார். அவருடைய பாராட்டுப் பேச்சுக்கு மீண்டும் கண் கலங்கினார் ஸ்வாசிகா.