சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சினிமாவில் பல கனவுகளுடன் வருபவர்கள் அதிகம். சிலருக்கு அந்த கனவுகள் உடனே நிறைவேறிவிடும், சிலருக்கு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், சிலருக்கு நடந்தும் நிலைக்காமல் போய்விடும்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பு 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவிலிருந்து வந்த சுவாசிகா. அப்போது சில படங்களில் நடித்தார், ஆனாலும் அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. தற்போது 31 வயதில் அவர் நடித்த 'லப்பர் பந்து' படம் அவருக்குத் திருப்புமுனையாக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள படமாக அமைந்துள்ளது.
அது பற்றிய தன்னுடைய மகிழ்ச்சியை கண்ணீருடன் பேசி நேற்றைய நன்றி அறிவிப்பு சந்திப்பில் பகிர்ந்து கொண்டார். “பல கனவுகளுடன் வந்தேன், எதுவும் நடக்கவில்லை. பெட்டி, படுக்கையுடன் மன வருத்தத்துடன் அம்மாவுடன் திரும்ப கேரளாவுக்கே சென்றுவிட்டேன். இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்நாட்ல வந்து ஒரு நல்ல படத்துல எனக்கு 'கம் பேக்' கிடைச்சது மகிழ்ச்சி. இங்க சென்னைல வீடு கட்டணும்னு ஆசைப்பட்டேன். இனிமே இங்க செட்டிலாகணும்னு கனவு மீண்டும் வருது. இந்தப் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் நான் நன்றாக நடிக்கிறேன் என ஒரு வார்த்தை கூட பாராட்டவேயில்லை, இப்பவாவது சொல்லுங்க, நீங்க சொல்வீங்கன்னு இன்னும் காத்திட்டிருக்கேன்” என்றும் வருத்தப்பட்டார்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, “நீங்க நல்லாதான் நடிச்சீங்க சுவாசிகா. சொல்லக் கூடாதுன்னு இல்ல, நான் சொல்றத விடவும் இவங்க சொல்லணும். செட்டிலயே, என் மனைவி கூட 'என் தலைவி'தான்டா இந்தப் படம்னு சொன்னாங்க. தமிழ்ல ரீஎன்ட்ரி வேணும்னு கேட்டாங்க. கதை சொல்லி முடிச்சதும் ஓகே சொல்லிட்டாங்க. எந்த மொழில பண்ணாலும், எனக்கு தமிழ்ல ரீ-என்ட்ரி வேணும். தமிழ்ல பிரேக் கிடைக்கணும்னு கேட்டாங்க, அவங்க ஹேப்பினா, நானும் ஹேப்பிதான்,” எனப் பாராட்டினார். அவருடைய பாராட்டுப் பேச்சுக்கு மீண்டும் கண் கலங்கினார் ஸ்வாசிகா.