கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளது. இது குறித்த ஏற்பாடுகள் தற்போது துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தனது கட்சி தொண்டர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் விஜய்.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மாநாட்டிற்கு வருகை தரும் கட்சித் தொண்டர்கள் எக்காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது. சாலையில் வரும்போது மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலைகளில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. கிணறு மற்றும் ஆபத்தான வளைவு பகுதிகளில் கவனமாக வரவேண்டும். மருத்துவ குழு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பேருந்து மற்றும் வேன்களில் வருபவர்கள் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவுரைகள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.