சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பாரத் ரத்னா விருது பெற்ற கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு சினிமா ஆகிறது என்றும், அதில் வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், வித்யா பாலன் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றத்தில் நடத்தி உள்ள போட்டோ ஷூட் பரபரப்பை கிளப்பி உள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி இந்த போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார். இது குறித்து வித்யா பாலன் கூறும்போது, “என் அம்மா காலையில் முதலில் பாடும் சுப்ரபாதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியது. அவருடைய குரலில்தான் எனது பொழுதுவிடியும். என்னைப் பொறுத்தவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு ஆன்மிக அனுபவம். எனவே, இது அன்பின் உழைப்பு, இந்த வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்”. என்கிறார்.
இந்த முயற்சிக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்தி சிக்கில் மாலா உதவி உள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்ந்த இடத்தில் அவர் அணியும் பட்டுப்புடவைகள், நகைகளை கொண்டு இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.