அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

திரைப்படத்தின் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும், அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆஸ்கர் விருது போட்டியையும் நடத்துகிறது. வளர்ந்து வரும் இளம் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இதனை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்காக போட்டி லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது. உலகம் முழுவதிலும் இருந்து 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 படங்கள் பங்கேற்றன. இதில் 15 மாணவர்கள் தயாரித்து, இயக்கிய ஆவணப் படம் மற்றும் குறும்படங்கள் சிறந்ததாக தேர்வாகின. இதில் இந்திய மாணவர்கள் 2 பேர் இடம்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ரிஷப் ராஜ் ஜெயின், 'எ ட்ரீம் கால்ட் குஷிக்' என்ற தலைப்பில் தயாரித்த ஆவணப்படத்திற்கு மாணவர் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள 'ரோஹிங்கியாக' அகதியின் கதையை சொல்லும் ஆவணப்படம் இது. ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அகாடமியை சேர்ந்த பிலிம் டிசைன் மாணவர் அக்ஷித் குமார் தான் இயக்கிய குறும்படம் ஒன்றுக்காக விருது பெற்றார்.




