அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு | என் கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கும் வெற்றி | பொன்னியின் செல்வன் பாடலில் தாகர் குடும்பத்திற்கு கிரெடிட் கொடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் | பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் |

நடிகர் கருணாகரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கலகலப்பு, சூது கவ்வும், விவேகம், தொடரி, ஜிகர்தண்டா, ரெட்ரோ, யாமிருக்க பயமே, கப்பல், இன்று நேற்று நாளை போன்ற பிரபலமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றவர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்யன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருணாகரன் கூறுகையில், "என்னுடைய முதல் படம் 'கலகலப்பு'. அதன் பின் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'யாமிருக்க பயமே' என்று தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தது. அதனால் சினிமா இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். சில படங்கள் சரியாக வரவேற்பு கிடைக்காத போது சினிமாவை விட்டு போகலாம் என பலமுறை முடிவு எடுத்திருக்கிறேன். அப்போது விஷ்ணு தான் என்னைப் போன்ற திறமையான நடிகர்கள் எல்லாம் அப்படி சென்றுவிடக் கூடாது என கூறி, அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்புகள் கொடுத்து மீண்டும் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார். அது இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு கண்டிப்பாக நன்றாக ஓடும்" என தெரிவித்துள்ளார்.




