நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகர் பிரித்விராஜ் கடந்த இரண்டு வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் ஏறுமுகத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மோகன்லால் நடிப்பில் மூன்றாவது முறையாக லூசிபர்-2 இரண்டாம் பாகமாக உருவாகும் 'எம்பிரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வில்லனாக நடிப்பதற்கு மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை விட சில மடங்கு அதிகமாகவே ஊதியம் பெறுகிறார்.
இந்த நிலையில் மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் தற்போது நிறைவேற்றிக் கொண்டுள்ளார் பிரித்விராஜ். மும்பை பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 30 கோடி மதிப்பிலான ஒரு புதிய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார் பிரித்விராஜ் இதற்கான முத்திரை கட்டணமாகவே 1.84 கோடி அவர் செலுத்தியுள்ளார். மும்பையில் அதிக பட வாய்ப்புகள் வருவதாலும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடப்பதாலும் தனக்கு அங்கே ஒரு வீடு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பிரித்விராஜ் இந்த வீட்டை வாங்கி இருப்பதாக தெரிகிறது.