மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் |
பாலிவுட்டில் ராய் கபூர் குடும்பத்தை சேர்ந்த நடிகர்களில் ஒருவர் ஆதித்ய ராய் கபூர். பிரபல தயாரிப்பாளரும் ராய் கபூர் பிலிம்ஸ் நிறுவனருமான சித்தார்த் ராய் கபூரின் சகோதரர் இவர். தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மும்பை பாந்த்ராவில் இவர் வசிக்கும் வீட்டிற்கு இவரை பார்ப்பதற்காக துபாயை சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அந்த சமயம் ஆதித்யா ராய் கபூர் வீட்டில் இல்லாததால் வீட்டில் இருந்த பணிப்பெண் உள்ளே இருந்தபடியே அந்தப் பெண்ணிடம் தகவல் கூறியுள்ளார்.
ஆனாலும் தான் ஆதித்ய ராய் கபூருக்கு சில உடைகளையும் பரிசு பொருட்களையும் கொண்டு வந்துள்ளதாக கூறியதை தொடர்ந்து அந்த பணிப்பெண் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். அது மட்டுமல்ல ஆதித்ய ராய் கபூர் தன்னை 6:00 மணிக்கு சந்திப்பதாக நேரம் ஒதுக்கி இருந்தார் என்றும் கூறினார். சிறிது நேரம் கழித்து மாலை ஆதித்யராஜ் வீடு திரும்பிய போது அங்கே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து அவர் யார் என்றே தனக்கு தெரியாது என கூறினார்.
இதனை தொடர்ந்து பணிப்பெண்ணும் வீட்டில் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பெண் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதும் மும்பை போலீசார் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் சல்மான் கானை இரண்டடுக்கு பாதுகாப்பையும் மீறி சந்திக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.