சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மலையாளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக டொவினோ தாமஸ் நடித்த அஜயண்டே ரெண்டாம் மோசனம், ஆசிப் அலியின் கிஷ்கிந்தா காண்டம், அங்கமாலி டைரிஸ் புகழ் ஆண்டனி வர்க்கீஸின் கொண்டல் என மூன்று பெரிய படங்கள் வெளியாகின. இதனுடன் ரகுமான் நடித்திருந்த பேட் பாய்ஸ் மற்றும் கேங்ஸ் ஆப் சுகுமார குறூப் என இன்னும் இரண்டு சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால் நடிகர் ஆசிப் அலி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது படம் மற்றும் டொவினோ தாமஸ், ஆண்டனி வர்கீஸ் ஆகிய மூவரின் படங்களை மட்டும் ஒன்றிணைத்து ஒரு புரோமோ வீடியோவாக வெளியிட்டு இந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் இந்த படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதில் அவர் மற்ற இரண்டு படங்களின் ரிலீஸையும் இருட்டடிப்பு செய்து விட்டார் என பேட் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த நடிகை ஷீலு ஆபிரகாம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியதுடன், மலையாள திரை உலகில் இப்படித்தான் சிலர் குழுவாக ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்பட்டு சிறியவர்களை முடக்குகின்றனர் என்றும் கூறியிருந்தார். இவர் மட்டுமல்ல ஆசிப் அலியின் அந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ள ஆசிப் அலி, “இப்படிப்பட்ட படங்கள் வருகிறது, ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணி ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள் என்பதற்காக தான் அப்படி ஒரு புரோமாவை வெளியிட்டேன். மற்றபடிமற்ற இரண்டு படங்களையும் மறைக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை. இதற்காக நான் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.