ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
தமிழில் நடிகர் விக்ரமுக்கு பெயர் வாங்கி தந்த காசி மற்றும் என் மன வானில், அற்புதத் தீவு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபல மலையாள இயக்குனர் வினயன். அதேபோல மலையாள திரையுலகில் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவராக அறியப்படுபவர் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன். இவர் தற்போது மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையில் மலையாளத் திரையுலகில் ஒரு சிலர் குழுவாக ஒன்று சேர்ந்து அதிகார மையமாக குறிப்பாக செயல்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் தனது சங்கத்தின் மூலமாக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் மறைமுகமாக தனது அதிகாரத்தை செலுத்தி வருகிறார் என்று சில இடங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. அது மட்டுமல்ல 2023ல் கேரள அரசு திரைப்படத்துறையை வழி நடத்துவதற்காக உருவாக்கிய ஆலோசனை குழுவில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணனையும் இணைத்துள்ளது.
இந்தநிலையில் இயக்குனர் வினயன், சினிமாவில் தான் படம் இயக்குவதற்கு தொடர்ந்து மறைமுக தடை விதிக்கும் செயல்களில் பி உன்னிகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார் என்றும் மலையாள சினிமாவில் அதிகார வர்க்கமாக செயல்படும் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணனை இந்த குழுவில் சேர்த்தது ஏன், இது தவறான முன்னுதாரணம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.