பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பெங்களூருவில் கடந்த மே மாதம் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய குற்றத்திற்காக தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட பலர் சிக்கினர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன்பின் அவர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள நகர கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்ட்டியில் அவர் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப் பொருளை உட்கொண்டதற்கான மருத்துவ சோதனை சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்து.
1086 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அந்த 'பார்ட்டி' குறித்த முழு விவரங்கள், கலந்து கொண்டவர்கள், சாட்சிகளின் ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளது எனத் தகவல். 'எம்டிஎம்ஏ, கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட பல போதை வஸ்துக்களை அந்த பார்ட்டியில் பயன்படுத்தியுள்ளார்களாம்.
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் திரைப்படத் துறையினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் உள்ளன. தெலுங்குத் திரையுலகிலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகை ஹேமா கலந்து கொண்ட பார்ட்டி குறித்து தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.