ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' |
பெங்களூருவில் கடந்த மே மாதம் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய குற்றத்திற்காக தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட பலர் சிக்கினர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன்பின் அவர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள நகர கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்ட்டியில் அவர் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப் பொருளை உட்கொண்டதற்கான மருத்துவ சோதனை சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்து.
1086 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அந்த 'பார்ட்டி' குறித்த முழு விவரங்கள், கலந்து கொண்டவர்கள், சாட்சிகளின் ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளது எனத் தகவல். 'எம்டிஎம்ஏ, கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட பல போதை வஸ்துக்களை அந்த பார்ட்டியில் பயன்படுத்தியுள்ளார்களாம்.
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் திரைப்படத் துறையினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் உள்ளன. தெலுங்குத் திரையுலகிலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகை ஹேமா கலந்து கொண்ட பார்ட்டி குறித்து தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.