'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

பெங்களூருவில் கடந்த மே மாதம் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய குற்றத்திற்காக தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட பலர் சிக்கினர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன்பின் அவர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள நகர கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்ட்டியில் அவர் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப் பொருளை உட்கொண்டதற்கான மருத்துவ சோதனை சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்து.
1086 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அந்த 'பார்ட்டி' குறித்த முழு விவரங்கள், கலந்து கொண்டவர்கள், சாட்சிகளின் ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளது எனத் தகவல். 'எம்டிஎம்ஏ, கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட பல போதை வஸ்துக்களை அந்த பார்ட்டியில் பயன்படுத்தியுள்ளார்களாம்.
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் திரைப்படத் துறையினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் உள்ளன. தெலுங்குத் திரையுலகிலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகை ஹேமா கலந்து கொண்ட பார்ட்டி குறித்து தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.