அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
கன்னட நடிகையான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்து, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பின் கர்நாடக அரசியலில் இறங்கினார். 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். இவர் திருமணம் செய்ய போவதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அப்படித்தான் சில தினங்களாக தொழிலதிபர் ஒருவருடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்தி பரவியது. இதற்கு இன்ஸ்டாவில், ‛‛ஊடகங்களால் எனக்கு பலமுறை திருமணம் நடந்துவிட்டது. எத்தனை முறை என கணக்கு வைக்கவில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் நானே முறைப்படி அறிவிப்பேன். அதுவரை ஆதாரமற்ற செய்திகள் பரப்புவதையும், வதந்திகளையும் நிறுத்துங்கள்'' என கோபமாக பதிவிட்டுள்ளார்.