ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத்திற்கு உதவி செய்வதற்காக தெலுஙகுத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் கோடிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி 1 கோடி, பாலகிருஷ்ணா 1 கோடி, மகேஷ் பாபு 1 கோடி, ஜுனியர் என்டிஆர் 1 கோடி, அல்லு அர்ஜுன் 1 கோடி என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில உதவிகளுக்கு அதன் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 1 கோடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவன் கல்யாண் ஏன் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு, “நான் நேரில் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நான் நேரில் வந்தால் அங்கு கூட்டம் கூடினால் நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றனர். அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் நேரில் செல்லவில்லை” என விளக்கமளித்துள்ளார். அதே சமயம் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதித்து நடவக்கை எடுத்து வருகிறார்.