பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கான நிவாரணத்திற்கு உதவி செய்வதற்காக தெலுஙகுத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் கோடிகளில் அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.
நடிகர் பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி 1 கோடி, பாலகிருஷ்ணா 1 கோடி, மகேஷ் பாபு 1 கோடி, ஜுனியர் என்டிஆர் 1 கோடி, அல்லு அர்ஜுன் 1 கோடி என இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில உதவிகளுக்கு அதன் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 1 கோடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பவன் கல்யாண் ஏன் நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு, “நான் நேரில் செல்ல வேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால், அதிகாரிகள் நான் நேரில் வந்தால் அங்கு கூட்டம் கூடினால் நிவாரணப் பணிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்றனர். அவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் நேரில் செல்லவில்லை” என விளக்கமளித்துள்ளார். அதே சமயம் நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் விவாதித்து நடவக்கை எடுத்து வருகிறார்.