இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்' . அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். போலி என்கவுன்டர் தொடர்பான கதையில் இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி போலீசாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதை யொட்டி இதன் டப்பிங் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜினி டப்பிங் ஸ்டுடியோவில் வசனம் பேசும் வீடியோவை வெளியிட்டனர். வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிக்களுக்காக கூலி படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் இடைவெளி விட்டு வந்துள்ளார் ரஜினி.