செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! | ரூ.100 கோடி வசூலித்த 'சூர்யாவின் சனிக்கிழமை' |
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்' . அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். போலி என்கவுன்டர் தொடர்பான கதையில் இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி போலீசாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் மற்ற பணிகள் நடக்கின்றன.
இப்படம் வருகின்ற அக்டோபர் 10ந் தேதி அன்று திரைக்கு வருவதை யொட்டி இதன் டப்பிங் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஜினி டப்பிங் ஸ்டுடியோவில் வசனம் பேசும் வீடியோவை வெளியிட்டனர். வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிக்களுக்காக கூலி படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் இடைவெளி விட்டு வந்துள்ளார் ரஜினி.