25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து சோசியல் மீடியாவில் குற்றச்சாட்டுகளாகவும் காவல்துறையில் புகார்களாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சீனியர் நடிகர்கள் சித்திக், முகேஷ் மட்டுமல்லாது நடிகர் ஜெயசூர்யாவும் இதுபோன்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இவர்கள் மேல் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி மீதும் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதற்கு முன்பு மற்ற நடிகர்கள் மீது புகார் கூறியவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து தற்போது குற்றம் சாத்தியுள்ளனர். ஆனால் நிவின் பாலி மீது குற்றம் சாட்டியுள்ள பெண் கடந்த 2023ல் தனக்கு வாய்ப்பு தருவதாக நிவின் பாலி கூறியதை நம்பி துபாய் வரை அவரை தேடி சென்றதாகவும் அங்கே உள்ள ஹோட்டலில் வைத்து அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நிவின்பாலி மட்டுமல்லாது இன்னும் ஐந்து பேர் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து நடிகர் நிவின்பாலி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, “இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இது குறித்து போலீசார் என்னிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது என் தரப்பில் இருந்து நான் கூறிய விளக்கங்கள் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே இருந்தது. இந்த குற்றச்சாட்டு என்னையும் என் குடும்பத்தையும் மிகவும் மோசமாக பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் அடைந்துள்ள வேதனை போலவே நானும் வேதனை அடைந்துள்ளேன். நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க போராடித்தான் ஆக வேண்டும். என்னை நிரபராதி என நிரூபிக்க சட்ட ரீதியாக எந்த எல்லைக்கும் செல்வேன்” என்று கூறியுள்ளார்.