'ரைட்டர்' பட இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்! | சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட தகவல்! | ஷாருக்கான் நடித்து வரும் 'கிங்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | பாட்ஷா அளவிற்கு பேராசை படும் அமரன் | என் வாழ்க்கையே படங்கள்: இளம் இயக்குநர் விஜய்ராகவா | பராசக்தி, சிவகாசி, டிராகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உருவான முதல் நட்பு | 25 நாட்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்படும் கோபிசந்த் பட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி | பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பாடகியுமான ஆண்ட்ரியா திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோயிலான அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஆண்ட்ரியா நெற்றியில் திருநீறும், குங்குமமும் இட்டு அண்ணாமலையார் கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சினிமா விழாக்களிலும் மற்ற விழாக்களிலும் மாடர்ன் உடையில் கொஞ்சம் கிளாமராக வருபவர் ஆண்ட்ரியா. கிறிஸ்வது மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்து மதக் கோயிலுக்கு போகும் போது பாந்தமாகச் செல்ல வேண்டும் என சுடிதார் அணிந்து சென்று வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவது வெற்றிக்குப் பின்னும் தெய்வீகம் பின்னால் இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நடிகையான சமந்தாவும் இந்து மதத்தில் பற்று கொண்டவர். வட இந்தியாவிலும் பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அதேப்போல மலையாள நடிகையான கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த நயன்தாராவும் தமிழக மருமகளாகி பல கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் வழக்கம் கொண்டவர் என்பதும் அவர்களது ஆன்மீகப் பற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது.




