Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் கங்குவா வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் : வாழ்த்திய ரஜினி

02 செப், 2024 - 04:16 IST
எழுத்தின் அளவு:
I-pray-Lord-for-the-success-of-Suryas-Kangua-:-Greetings-Rajini

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலியில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. மேலும் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையனும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக வேட்டையன், கங்குவா இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறதா இல்லை இரண்டில் ஒரு படம் பின்வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது. கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் மட்டுமே வெளியாகிறது. கங்குவா வேறு தேதியில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் கூலி படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்ற ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, வேட்டையனுக்கு வழி விட்டு சூர்யாவின் கங்குவா பின்வாங்கி இருப்பதை பற்றி அவரிடத்தில் கேள்வி எழுப்பிய போது, சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய கங்குவா படம் நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார் .

மேலும் ரஜினியிடத்தில், மலையாள நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாலியல் தொல்லைக்கு எதிராக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி இருப்பது குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் கொடுத்துவிட்டு இடத்தை காலி பண்ணி விட்டார். இப்படி ரஜினி மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களும், கேரளா நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஹேமா கமிஷன் விசாரணை குறித்து எந்த பதிலும் கொடுக்காமல் நழுவிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்ட்ரியாதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ... விசில் போடு பாடலில் உள்ள ட்விஸ்ட் விசில் போடு பாடலில் உள்ள ட்விஸ்ட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
02 செப், 2024 - 11:09 Report Abuse
தமிழன் திருடனிடம் போலிஸைப் பற்றி கேட்பது போல் உள்ளது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in