தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலியில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. மேலும் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையனும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக வேட்டையன், கங்குவா இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறதா இல்லை இரண்டில் ஒரு படம் பின்வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது. கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் மட்டுமே வெளியாகிறது. கங்குவா வேறு தேதியில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் கூலி படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்ற ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, வேட்டையனுக்கு வழி விட்டு சூர்யாவின் கங்குவா பின்வாங்கி இருப்பதை பற்றி அவரிடத்தில் கேள்வி எழுப்பிய போது, சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய கங்குவா படம் நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார் .
மேலும் ரஜினியிடத்தில், மலையாள நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாலியல் தொல்லைக்கு எதிராக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி இருப்பது குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் கொடுத்துவிட்டு இடத்தை காலி பண்ணி விட்டார். இப்படி ரஜினி மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களும், கேரளா நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஹேமா கமிஷன் விசாரணை குறித்து எந்த பதிலும் கொடுக்காமல் நழுவிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.