ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் |

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், யாரோ இவன் யாரோ, நான் போகிறேன் என்று தொடங்கும் இரண்டு பாடல்களை பின்னணி பாடியிருக்கிறார். இதற்காக கமலனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மெய்யழகன் படத்தின் இரண்டு பாடல்களுக்காக தனது அருமையான குரலை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி. உங்களது மெல்லிய குரல் உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.