படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், யாரோ இவன் யாரோ, நான் போகிறேன் என்று தொடங்கும் இரண்டு பாடல்களை பின்னணி பாடியிருக்கிறார். இதற்காக கமலனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மெய்யழகன் படத்தின் இரண்டு பாடல்களுக்காக தனது அருமையான குரலை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி. உங்களது மெல்லிய குரல் உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.