7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛மெய்யழகன்'. சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் இந்த மெய்யழகன் படத்தில் நடிகர் கமல்ஹாசன், யாரோ இவன் யாரோ, நான் போகிறேன் என்று தொடங்கும் இரண்டு பாடல்களை பின்னணி பாடியிருக்கிறார். இதற்காக கமலனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில், மெய்யழகன் படத்தின் இரண்டு பாடல்களுக்காக தனது அருமையான குரலை கொடுத்த அண்ணாவுக்கு நன்றி. உங்களது மெல்லிய குரல் உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் அன்பு ஆதரவால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் சூர்யா.