பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நான்காவது பாடல் இன்று(ஆக., 31) வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ள நிலையில், ஒரு பாடலை மறைந்த பாடகி பவதாரணி உடன் இணைந்து பாடியிருந்தார். பவதாரணிக்காக ஏஐ தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டது. மேலும், முதல் மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், இன்று வெளியாகும் நான்காவது பாடலாவது ஹிட் அடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் கதையை விஜய் இடத்தில் சொன்ன போது இசை அமைப்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பின்னர் விஜய்தான், வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சிறப்பாக இருக்குமே என்று சொல்லி யுவன் சங்கரை இசையமைப்பாளராக புக் பண்ணுமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.