திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

விஜய் நடித்திருக்கும் கோட் படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரப்போகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நான்காவது பாடல் இன்று(ஆக., 31) வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல்களை விஜய் பாடியுள்ள நிலையில், ஒரு பாடலை மறைந்த பாடகி பவதாரணி உடன் இணைந்து பாடியிருந்தார். பவதாரணிக்காக ஏஐ தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டது. மேலும், முதல் மூன்று பாடல்களும் பெரிதாக ஹிட் அடிக்காத நிலையில், இன்று வெளியாகும் நான்காவது பாடலாவது ஹிட் அடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் இந்த கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் கதையை விஜய் இடத்தில் சொன்ன போது இசை அமைப்பாளர் குறித்து நான் எதுவும் பேசவில்லை. பின்னர் விஜய்தான், வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜா காம்பினேஷன் சிறப்பாக இருக்குமே என்று சொல்லி யுவன் சங்கரை இசையமைப்பாளராக புக் பண்ணுமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார்.