என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாஸில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார் . ரஜினி போலீஸ் படத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் ரஜினி தனக்கான வேட்டையன் டப்பிங்கை பேச தொடங்கி இருக்கிறார். இது குறித்த ஒரு வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு காட்சியை டப்பிங் பேசிய முடித்துவிட்டு, டைரக்டர் சார் சூப்பர் சார் என அந்த காட்சியை வியப்புடன் சொல்லி இயக்குனரை ரஜினி பாராட்டுவது போன்று இடம்பெற்றுள்ளது. அதோடு குறி வெச்சா இற விழனும் என ரஜினி பேசும் வசனமும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கிறது.