ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் | மீண்டும் தலைவராக விரும்பும் மோகன்லால்... : ஆனால் ஒரு நிபந்தனையுடன்? |
சினிமாவில் தோல்வி என்பது சகஜமான ஒன்று. தற்போதெல்லாம் ஆண்டுக்கு 250 படங்கள் வெளிவருகிறது. ஆனால் 25 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் சினிமாவின் முதல் தோல்வி படம் என்று 1939ம் ஆண்டு வெளிந்த 'பிரஹலாதா' என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள். தெலுங்கில் 1932ம் ஆண்டு வெளிவந்த 'பக்த பிரஹலாதா' படத்தை தழுவி இது உருவானது.
பி.என்.ராவ் இயக்கி இருந்தார். டி.ஆர்.முத்துராமலிங்கம், எம்.ஆர்.சாந்தலட்சுமி, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்ஜிஆர் இந்த படத்தில் இந்திராவாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சாமா சகோதரர்கள் இசை அமைத்திருந்தார்கள். ஷியாம் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் வெளிவந்த 6வது பேசும் படம் இது. அப்போது பரவலாக தமிழ்நாட்டில் பிரஹலாதா கதை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதற்கு ஈடாக இந்த படம் அமையாததே தோல்விக்கு காரணம் என்கிறார்கள். சேலம் சங்கர் பிலிமிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. முதலில் வெளியூர்களிலும், பின்னர் சென்னையிலும் வெளியான படம்.