திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சினிமாவில் தோல்வி என்பது சகஜமான ஒன்று. தற்போதெல்லாம் ஆண்டுக்கு 250 படங்கள் வெளிவருகிறது. ஆனால் 25 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் சினிமாவின் முதல் தோல்வி படம் என்று 1939ம் ஆண்டு வெளிந்த 'பிரஹலாதா' என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள். தெலுங்கில் 1932ம் ஆண்டு வெளிவந்த 'பக்த பிரஹலாதா' படத்தை தழுவி இது உருவானது.
பி.என்.ராவ் இயக்கி இருந்தார். டி.ஆர்.முத்துராமலிங்கம், எம்.ஆர்.சாந்தலட்சுமி, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்ஜிஆர் இந்த படத்தில் இந்திராவாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சாமா சகோதரர்கள் இசை அமைத்திருந்தார்கள். ஷியாம் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் வெளிவந்த 6வது பேசும் படம் இது. அப்போது பரவலாக தமிழ்நாட்டில் பிரஹலாதா கதை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதற்கு ஈடாக இந்த படம் அமையாததே தோல்விக்கு காரணம் என்கிறார்கள். சேலம் சங்கர் பிலிமிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. முதலில் வெளியூர்களிலும், பின்னர் சென்னையிலும் வெளியான படம்.