ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஷ்ருதன் ஜெய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவில் தேர்வில் இந்திய அளவில் 13வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார். தற்போது விழுப்புரம் மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோபிநாத் இஞ்செட்டி - ஜானகி தம்பதியின் மகள் மானஸ்வினிக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை மரக்கன்று கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மா.சுப்பிரமணியன், உதயநிதி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். கலை உலகில் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.