ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

மலையாள திரை உலகில் நடந்துள்ள பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பான பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பிரபல மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா தேசிய விருது பெற்ற மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார். “2009ம் ஆண்டு 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடித்தபோது ரஞ்சித் தனி அறைக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'' என்றார்.
இதே போல மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் சித்திக் மீது ரேவதி சம்பத் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். 'சித்திக் என்னை ஓட்டல் அறைக்கு அழைத்து ஒருமணி நேரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்” என்றார்.
இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அது இன்னும் ஏற்கப்படவில்லை.