ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரை உலகில் நடந்துள்ள பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பான பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பிரபல மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா தேசிய விருது பெற்ற மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் தெரிவித்தார். “2009ம் ஆண்டு 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடித்தபோது ரஞ்சித் தனி அறைக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்'' என்றார்.
இதே போல மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளரான நடிகர் சித்திக் மீது ரேவதி சம்பத் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். 'சித்திக் என்னை ஓட்டல் அறைக்கு அழைத்து ஒருமணி நேரம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்” என்றார்.
இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அது இன்னும் ஏற்கப்படவில்லை.