மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
விழாவில் ரஜினி பேசியதாவது: கருணாநிதி நுாற்றாண்டை கொண்டாடியது போல் வேறு எந்த தலைவரையும் கொண்டாடியது இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் சிறந்த அறிஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்தே அவர் ஆளுமைக்கு உதாரணம். உலகில் வேறு எந்த தலைவரையும் இப்படி கொண்டாடியது இல்லை.
திமுகவில் மூத்த மாணவர்களை சாமாளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு 'ஹேட்ஸ் ஆப்'. அமைச்சர் துரைமுருகனை சாமாளிப்பது கடினம் என கருணாநிதியே சொல்லி இருக்கிறார். கருணாநிதியுடன் அரசியல் பேசினால் எச்சரிக்கையாக பேச வேண்டும். கருணாநிதி நினைவிடம் ஒரு தாஜ்மகால். கருணாநிதியின் பேச்சு வீணை போன்றது. பத்திரிகையாளர்களை புன்னகையுடன் எதிர்கொள்வார். கருணாநிதிக்கு வந்த சோதனை வேறு யாருக்காவது வந்தால் காணாமல் போயிருப்பார்கள். எதை பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்பது முக்கியம்.
தேர்தல் வெற்றிகள் முதல்வர் ஸ்டாலின் ஆளுமையை காட்டுகிறது. கருணாநிதி மீது மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்டவர் ஸ்டாலின்.
புத்தகத்தின் விலை ரூ.1000 என்பது ரொம்ப அதிகம். குறைத்தால் அனைவரும் படிப்பார்கள். இவ்வாறு ரஜினி பேசினார்.