பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

'கே.ஜி.எப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பஸ்ரூர், ஒரு இயக்குனரும் ஆவார். இதுவரை 5 படங்களை இயக்கி உள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கும் கன்னட படம் 'வீர சந்திரஹாசா'.
கர்நாடக மாநிலத்தில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வரும் வீர சந்திரஹாசாவின் கதையை திரைப்படமாக்குகிறார். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
இதுகுறித்து ரவி பஸ்ரூர் கூறும்போது “கர்நாடகாவின் பாரம்பரியமான யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி இது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல... கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழி பெயர்க்கும் திறனும் தேவையாக இருந்தது. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக 'வீர சந்திரஹாசா உருவாகி உள்ளது. என்றார்.