பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'கே.ஜி.எப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பஸ்ரூர், ஒரு இயக்குனரும் ஆவார். இதுவரை 5 படங்களை இயக்கி உள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கும் கன்னட படம் 'வீர சந்திரஹாசா'.
கர்நாடக மாநிலத்தில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வரும் வீர சந்திரஹாசாவின் கதையை திரைப்படமாக்குகிறார். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
இதுகுறித்து ரவி பஸ்ரூர் கூறும்போது “கர்நாடகாவின் பாரம்பரியமான யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி இது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல... கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழி பெயர்க்கும் திறனும் தேவையாக இருந்தது. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக 'வீர சந்திரஹாசா உருவாகி உள்ளது. என்றார்.