ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
'கே.ஜி.எப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பஸ்ரூர், ஒரு இயக்குனரும் ஆவார். இதுவரை 5 படங்களை இயக்கி உள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கும் கன்னட படம் 'வீர சந்திரஹாசா'.
கர்நாடக மாநிலத்தில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வரும் வீர சந்திரஹாசாவின் கதையை திரைப்படமாக்குகிறார். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
இதுகுறித்து ரவி பஸ்ரூர் கூறும்போது “கர்நாடகாவின் பாரம்பரியமான யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி இது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல... கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழி பெயர்க்கும் திறனும் தேவையாக இருந்தது. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக 'வீர சந்திரஹாசா உருவாகி உள்ளது. என்றார்.